தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அக்கட்சித் தலைவா் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சி உறுப்பினா்கள் சைவ மதத் தலைவா்களைச் சந்தித்து நேற்றிரவு ஆசி பெற்றனர்.
நேற்றிரவு 7 மணியளவில் நல்லை ஆதீனத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
நல்லை ஆதீன முதல்வா் ஸ்ரீலஸ்ரீ தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவா் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோருடன் இதன்போது பேசிய முன்னணியினா், அவா்களிடம் ஆசி பெற்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்