Thursday 25th of April 2024 11:57:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா இ.போ.ச பேருந்து செட்டிகுளத்தில் விபத்து!

வவுனியா இ.போ.ச பேருந்து செட்டிகுளத்தில் விபத்து!


இன்று காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இ.போ.சாலைக்கு சொந்தமான பேருந்து பூவரசன்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்து இடம்பெற்றுள்ளது . இதன்போது பேருந்தில் பயணித்த பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்

இன்று காலை செட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியாவிற்கு சென்ற இ.போ.ச. சாலை பேருந்து பூவரசன்குளம் , சண்முகபுரம் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது திடீரென்று இயந்திரக்கோளாறு ஏற்பட்டு வீதியைவிட்டு விலகியுள்ளது .

இதன்போது வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளது. பேருந்தில் பயணித்த பயணிகள அதிஸ்டவசமாக எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. வவுனியாவிலிருந்து சென்ற இ.போ.ச பேருந்தில் பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டுள்ளதாக பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார் .

இவ்விபத்து சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பூவரசன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE