ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க இன்னமும் விலகவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் கட்சிக்கு ஒரு புதிய தலைவரின் அவசியத்தை அவா் வலியுறுத்தினார் என ஐக்கிய தேசியக் கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளா் அகிலா விராஜ் கரியவசம் நேற்றுக் கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும் ரணில் பதவி விலகுவது தொடா்பில் எந்த முடிவுகளும் எடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று வெளியிடுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.