Thursday 25th of April 2024 01:35:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
தேசியப்பட்டியல் தொடர்பில் சஜித் அணி இன்று ஆராய்வு!

தேசியப்பட்டியல் தொடர்பில் சஜித் அணி இன்று ஆராய்வு!


ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கான தீர்மானமிக்க கலந்துரையாடல் இன்றிரவு இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, இறுதி முடிவு தொடர்பாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அந்தக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். மேலும் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் தேசிய பட்டியலில் இடம் கிடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரும் கோரி வருகின்றனர்.

இந்தநிலையில் பெரும் நெருக்கடிக்கு மத்தியிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதிப் பேச்சு இன்றிரவு முன்னெடுக்கப்படவுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE