Friday 29th of March 2024 07:38:03 AM GMT

LANGUAGE - TAMIL
-
இந்தியத் தூதுவருடன் மனோ அணி சந்திப்பு!

இந்தியத் தூதுவருடன் மனோ அணி சந்திப்பு!


மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேக்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பு 7இல் அமைந்துள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வே. இராதாகிருஸ்ணன், உப தலைவர்களான எம்.வேலுகுமார், அ.அரவிந்குமார், எம்.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

பிரதி இந்தியத் தூதுவர் வினோத் ஜெகப், அரசியல்துறைப் பொறுப்பாளர் கவுன்சிலர் திருமதி பானுபிரகாஸ் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மலையகத்துக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் உட்பட சமகால விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE