Wednesday 24th of April 2024 12:03:38 PM GMT

LANGUAGE - TAMIL
.
நாடு திரும்பியவருக்கு தொற்று உறுதி: கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!

நாடு திரும்பியவருக்கு தொற்று உறுதி: கொரோனா தொற்று மேலும் அதிகரிப்பு!


நாடுதிரும்பியவர்கள் மூலம் இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றைய தினம்9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தற்போது வரை மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து நாடுதிரும்பியவர்களில் மேலும் ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதையடுத்து கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 2881 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்றைய தினம் 16 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதை அடுத்து இதுவரையில் பூரணமாக குணமடைந்து உள்ளவர்களது எண்ணிக்கை 2638 ஆக உயர்வடைந்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் 232 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE