இலங்கையில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பி.சி.ஆர். பரிதோனைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், கொரோனா தொற்றாளர்களை விரைவில் கண்டறியும் நோக்கில் மாதாந்தம் 30 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீர தெரிவித்துள்ளார்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் காரணமாக ஒருவர் உயிரிழக்கும் நிலையில் அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை