இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு ரைசியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காமாலேயா ஆய்வு நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இலங்கையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு செலுத்தப்படுமா என தேசிய தொற்று நோயியல் பிரிவின் நிபுணர் வைத்தியர் சுதாத் சமரவீரவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கியல் ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் இலங்கையில் உள்ள தொற்றாளர்களுக்கு செலுத்தப்படும் என அவர் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை