சீனாவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய சீனாவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் உலகளாவிய பேரனர்த்தமாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் புதிதாக மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சீன சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு புதிதாக இனம் காணப்பட்டவர்களில் 9 பேர் சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் இனம் காணப்பட்ட 25 பேரில் 20 பேருக்கு எதுவித அறிகுறிகளும் இல்லாத நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை 84 ஆயிரத்து 737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி 4 ஆயிரத்து 364 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சையின் பின்னர் 79 ஆயிரத்து 342 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் 761 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), சீனா