தமிழ்த் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விடத்தில் வணக்கம் செலுத்தி பணிகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் பங்கேற்க விரும்புவர்கள் தன்னுடன் இணைந்து அங்கு வருமாறும் அவர் நேற்று அழைப்புவிடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று முற்பகல் தனது கூட்டணிக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சுரேஷ்பிறேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட்ட பெருமளவான ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் சென்ற விக்னேஸ்வரன்,
அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சுடர் தூபியில் சுடறேற்றி மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.