அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் நடப்பு ஆட்சிக்காலம் நிறைவுகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ளது. அத் தேர்தலில் ஆளும் அதிமுக கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதால் கட்சிக்குள் பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து சென்னை இராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அவசரமாக ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன், சி.வி.சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.