Tuesday 16th of April 2024 03:34:58 AM GMT

LANGUAGE - TAMIL
-
கல்முனைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

கல்முனைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!


கல்முனைப் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை மாநகர முதல்வரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டக்காரர்கள் கல்முனைப் பிரதேச செயலகத்தில் இருந்து ஊர்வலகமாக கல்முனை பொலிஸ் நிலையம் வரை சென்று கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைச் சந்திக்க முற்பட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களை அணுகிய பொறுப்பதிகாரி அவர்களை எச்சரிக்கை செய்த பின்னர் திருப்பி அனுப்பினார்.

கல்முனை மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் காணப்படுவதுடன் ஒரே நுழைவாயில் ஊடாக உத்தியோகத்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வளாகத்தில் நின்ற ஒரு பாரிய மரத்தை வெட்டியமைக்காக பிரதேச செயலக உத்தியோகத்தர்களை முதல்வர் அநாகரிக வார்த்தைகளால் திட்டினார் என்று அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE