Wednesday 24th of April 2024 01:36:55 PM GMT

LANGUAGE - TAMIL
.
பாடசாலைகளை வழமைபோன்று ஆரம்பிக்க கல்வி அமைச்சு ஆலோசனை!

பாடசாலைகளை வழமைபோன்று ஆரம்பிக்க கல்வி அமைச்சு ஆலோசனை!


கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள் நேரக்கட்டுப்பாடு உள்ளிட்ட நடைமுறைகளின் கீழ் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வழமை போன்று பாடசாலை செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறிது கல்வி அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 200 க்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

வைரஸ் பரவலின் தற்போதைய நிலைமையினை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 200 க்கும் அதிகமான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டிய தினம் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பாடசாலைகளை வழமை போல் நடாத்திச் செல்ல முடியுமானால் வழமைப்போல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைத்துக் கொள்ளவதில் தடையில்லை என கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE