Thursday 18th of April 2024 09:29:08 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஞானசார தேரர் நியமன விவகாரம்: நீதிமன்றம் செல்கிறது எங்கள் மக்கள் சக்தி!

ஞானசார தேரர் நியமன விவகாரம்: நீதிமன்றம் செல்கிறது எங்கள் மக்கள் சக்தி!


எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் நியமனத்திற்கு ஞானசார தேரரை நியமித்த விவகாரம் கட்சிக்குள் கடும் இழுபறிகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீர்வுக்காக நீதிமன்றத்தை நாட உள்ளதாக அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (ஓகஸ்ட்-13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், எங்கள் மக்கள் சக்தி கட்சியின் அதிகாரபூர்வமாக ஒப்பந்தத்தின் ஊடாக தேசிய பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக வெவ்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்படும் அழுத்தங்கள் காரணமாக நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்துக் கொள்ளுதல் பொருத்தமான ஒரே நடவடிக்கையாக இருக்கும்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் செயலாளராக கூறப்படும் வெதினிகம விமலதிஸ்ஸ தேரரால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கோரி தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்ட போதும், நெருக்கடிக்கு மத்தியில் ஞானசார தேரரின் பெயரிடப் பட்டுள்ளமையினால் பல பிரச்சினைகள் உருவெடுததுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE