உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக விமானப் போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாது மாலைதீவில் சிக்கியிருந்த 179 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தில் மாலைதீவில் இருந்து ஏற்றிவரப்பட்ட 179 இலங்கையர்கள் இன்று (ஓகஸ்ட்-13) மதியம் 1.30 மணியளவில் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு விசேட விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட்ட அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை