கடந்த இரண்டு மாதகாலத்தில் போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன்-6ம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 427 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஜூன் ஆறாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரை ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் 26 ஆயிரத்து 886 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் மாத்திரம் 15 ஆயிரத்து 404 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 24 ஆயிரத்து 314 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களின் போது பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த 23 ஆயிரத்து 139 பேரும் பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 45 ஆயிரத்து 88 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவற்துறை ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.