"நாடாளுமன்றத் தேர்தலில் நான் தோல்வி அடைந்திருந்தாலும் எதிர்வரும் நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றுவேன்."
- இவ்வாறு கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்வி மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளத்தில் கருணா அம்மான் இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் கருத்துக் கூறிய அவர், "எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே அரசியல் செய்யப் போகின்றேன்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.