Saturday 20th of April 2024 03:20:21 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்ப்பாணத்தில் செஞ்சோலை நினைவேந்தல்; த.தே.ம.முன்னணி முன்னெடுத்தது!

யாழ்ப்பாணத்தில் செஞ்சோலை நினைவேந்தல்; த.தே.ம.முன்னணி முன்னெடுத்தது!


செஞ்சோலை படுகொலையின் 14 ம் ஆண்டுநினைவு நாள் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் செஞ்சோலை கிராமத்தில் விமான குண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்ட54 பாடசாலை மாணவர்கள் உட்பட 61 சிறுவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் இன்றைய தினம் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி மாநாட்டு நினைவு முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டது.

உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் நினைவாக தீபங்கள் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுஅக வணக்கம் செலுத்தப்பட்டதோடு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் கஜேந்திரகுமார்பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE