யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் தனியார் காணி ஒன்றிலிருந்து எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொட்டடி மீனாட்சி அம்மன் ஆலய வீதிப் பகுதியில் உள்ள காணி ஒன்றின் உரிமையாளர் காணியில் கொட்டகை அமைப்பதற்காக நிலத்தை தோண்டியபோது எலும்புக்கூட்டினைக் கண்ணுற்றிருக்கின்றார்.
எலும்புக்கூட்டுடன் பெண்கள் அணியும் ஆடைகளும் காணப்பட்டுள்ளன. குறித்த காணி 2006ஆம் ஆண்டுக்கு முன்னர் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்