கொரோனா தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைகள் வரும் திங்கட் கிழமை முதல் மீளவும் ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (ஓகஸ்ட்-14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பல்கலைக் கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை 15 முதல் மருத்துவ பீடங்களின் 3 ஆம் ஆண்டு மாணவர்களின் பரீட்சைகள் நடைபெற்றதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்ட்டிருந்த அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்டாலும், பல்கலைக் கழகங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை