வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய நிலையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு முழங்காவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 98 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு யாழ் கொரோனா ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்த போதே குறித்த மூவருக்கும் தொற்று உறுதியாகியிருந்தது.
இதைவிட ஜப்பானில் இருந்து நாடு திரும்பியிருந்த ஒருவருக்கு சற்று முன்னதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதையடுத்து கொரோன தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 2886 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 12 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களது எண்ணிக்கை 2658 ஆக உள்ளது.
இன்று தொற்று உறுதியான நால்வருடன் சேர்த்து தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை