Thursday 28th of March 2024 09:08:22 AM GMT

LANGUAGE - TAMIL
-
85 அரச நிறுவனங்கள் பிரதமர் மஹிந்த வசம்  - சஜித் அணி கடும் சாடல்

85 அரச நிறுவனங்கள் பிரதமர் மஹிந்த வசம் - சஜித் அணி கடும் சாடல்


"70 வயதைக் கடந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் 85 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முதியவர் ஒருவரால் எவ்வாறு அவற்றை வினைத்திறன் மிக்கதாக இயக்க முடியும்.?" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி.

"ராஜபக்சக்களுக்குத் தேவையான வகையிலேயே புதிய அரசமைப்பு இயற்றப்படும் அபாயம் இருக்கின்றது" என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் அமைச்சுப் பதவி வகிக்க முடியாது. அப்படியிருந்தும் அரசமைப்பை மீறும் வகையில் பாதுகாப்பு அமைச்சை அவர் தம்வசம் வைத்துள்ளார்.

அடுத்ததாக மஹிந்த ராஜபக்சவுக்கு 74 வயதாகின்றது. அவரின்கீழ் 85 இற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கலாசாரம் உட்பட சில அமைச்சுகளும் அவரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. எனவே, அவரால் எவ்வாறு சுறுசுறுப்பாக இயங்க முடியும் என்ற வினாவும் எழுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் புதிய அரசமைப்பு தொடர்பில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதில் எவ்வாறான விடயங்கள் உள்ளடக்கப்படும் என்பது தெரியாது. சிலவேளை தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் விதத்தில் தமக்குத் தேவையான வகையில் ராஜபக்சக்கள் அரசமைப்பை உருவாக்கக்கூடும் என்ற அச்சநிலையும் காணப்படுகின்றது.

எனவே, இவற்றுக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடுவதற்கு ஒன்றிணையுமாறு அனைத்துத் தரப்புகளுக்கும் அழைப்பு விருக்கின்றோம்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE