தற்போது நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சில அரசியல் புள்ளிகள் மாகாண முதலமைச்சர் பதவியை இலக்கு வைத்து தேர்தல் அறிவிப்பு வந்த பின்னர் தமது பா.ம..உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்த வருட முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் மூவர் இராஜிநாமா செய்வார்கள் எனத் தெரியவருகின்றது.
இது தொடர்பில் கட்சித் தலைமைகளுக்கு முன்கூட்டியே அவர்கள் அறிவித்துவிட்டனர் எனவும், மாகாண முதலமைச்சர் பதவியை இலக்குவைத்தே அவர்கள் களமிறங்கவுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
பதுளை, பொலனறுவை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரே இவ்வாறு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரும் மாகாண முதலமைச்சர் பதவிக்காகப் போட்டியிடக்கூடும் எனவும், அவர் இம்முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்துள்ளார் எனவும் கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.