Saturday 20th of April 2024 07:37:51 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 154 பேர் விடுவிப்பு!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 154 பேர் விடுவிப்பு!


டுபாயிலிருந்து இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 154 பேர் இன்றயதினம் விடுவிக்கப்பட்டனர்.

கொவிட்-19 நோய்தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும்செயற்பாடுகள்அரசினால்முன்னெடுக்கப்பட்டிருந்தது .

அந்தவகையில் கடந்த 3 ஆம் திகதி டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்ட பயணிகள் பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்தநிலையில், 154 பேர் அவர்களது சொந்த இடங்களான, கம்பகா, கொழும்பு, கண்டி,கேகாலை, திருகோணமலை, களுத்துறை போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE