இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லி செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசியக் கொடியை ஏற்றினார் .
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக பல்வேறு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், தேசியக் கொடியை ஏற்றி பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
காலை 7.34 மணிக்கு சுதந்திர தின உரையை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோதி சரியாக காலை 9.01 மணிக்கு உரையை நிறைவு செய்தார்.
இம்முறை தொற்று நோயால் வழமையான சுதந்திர தின அணிவகுப்புக்கள் இடம்பெறாமல் மிக எளிமையாகவே நிகழ்வுகள் நடைபெற்றன.