நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி (த.தே.ம.முன்னணி) உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று முள்ளிவாக்காலில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
பதவி ஏற்பு நிகழ்வினை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்துவதாக அறிவித்திருந்த அவர்கள் இன்று ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் சென்றிருந்தனர்.
இந்நிலையில் சற்று முன்னர் முள்ளிவாய்க்காவில் உள்ள சுடர் ஏற்றும் தூபியில் சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றது.