Wednesday 24th of April 2024 08:32:20 AM GMT

LANGUAGE - TAMIL
-
மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியது முன்னணி! பதவி பறிப்பு?

மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பியது முன்னணி! பதவி பறிப்பு?


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் மணிவண்ணனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுவிட்டதாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

பதவி ஏற்பதற்கு முன்பாக முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் மணிவண்ணன் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

மணிவண்ணனுக்கான கடிதம் இரவு மின் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் பதிவுத் தபால் மூலம் இன்று அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.

கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு கஜேந்திரகுமார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நேற்று முன்தினம் மத்தியகுழு கூடியபோது தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து மணிவண்ணனை நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இது குறித்து மணிவண்ணனிடம் கேள்வி எழுப்பியபோது அவ்வாறான அறிவித்தல்கள் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும் கிடைத்தபின்னரே அடுத்த கட்டம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் மணிவண்ணன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE