Thursday 25th of April 2024 09:31:29 AM GMT

LANGUAGE - TAMIL
.
நாடு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு!

நாடு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி: இலங்கையில் கொரோனா தொற்று அதிகரிப்பு!


நாடுதிரும்பியவர்களுக்கு கொரோனா தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

துருக்கி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து கொரோன தொற்றுக்கு உள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 2886 இல் இருந்து 2888 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 8 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதை அடுத்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களது எண்ணிக்கை 2666 ஆக உள்ளது.

தற்போது தொற்று உறுதியான இருவருடன் சேர்த்து தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 211 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் இதுவரை சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE