இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தகவலை பதிவிட்டுள்ளார். அப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இன்று இரவு 19.29 (7.29) முதல் நான் ஓய்வு பெற்றுள்ளதாக கருதிக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு இத்தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்க்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, உலகம்