Wednesday 24th of April 2024 12:57:49 PM GMT

LANGUAGE - TAMIL
.
9வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவின் போது பொதுமக்கள் பார்வைகூடம் மூடப்படுகிறது!

9வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவின் போது பொதுமக்கள் பார்வைகூடம் மூடப்படுகிறது!


இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் முலாவது அமர்வு வரும் 20ம் திகதி ஆரம்பிக்க உள்ள நிலையில் அதன் போது பொதுமக்கள் பார்வைகூடம் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பொதுமக்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் தற்போது இணைய முறைமை ஊடாக தங்களது சுய தகவல்களை வழங்கியுள்ளதாகவும் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE