அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு கடந்த 24 மணி நேரங்களில் 25 போ் பலியாகியுள்ளனர். அனைத்து மரணங்களும் விக்டோரியா மாநிலத்தில் பதிவாகியுள்ளன. நாட்டில் ஒரே நாளில் பதிவான அதிக கொரோனா உயிர்ப் பலி இதுவாகும்.
அத்துடன் விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மரணமடைந்தவர்களில் 22 பேர் முதியோர் இல்லங்களில் ஏற்பட்ட பரவிய தொற்று நோயுடன் தொடர்புடையவர்களாவர்.
புதிய மரணங்களுடன் அவுஸ்திரேலியாவில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 421 ஆக அதிகரித்துள்ளது. விக்டோரியாவில் மட்டும் 334 போ் இறந்துள்ளனர்.
தற்போது விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 657 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இவா்களில் 44 பேர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ளனர்.
விக்டோரியாவில் கொரோனா பரவலின் தீவிரம் படிப்படியாக குறைந்துவருகிறது. எனினும் இருப்பினும் மக்கள் தொடர்ந்தும் விழிப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என மாநிய முதல்வர் டானியல் ஆண்ட்ரூஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா