Tuesday 16th of April 2024 06:55:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒரே நாளில் 120 பேரை பலியெடுத்தது கொரோனா: தமிழ்நாட்டில் தொடரும் கொரோனா ஆதிக்கம்!

ஒரே நாளில் 120 பேரை பலியெடுத்தது கொரோனா: தமிழ்நாட்டில் தொடரும் கொரோனா ஆதிக்கம்!


தமிழ்நாட்டில் ஒரே நாளில் 120 பேரை பலியெடுத்து தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது கொரோனா வைரஸ்.

தமிழ்நாட்ல் கொரோனா தொற்று நிலவரங்கள் குறித்து தமிழ்நாடு சுகாதார அமைச்சினால் விடுக்கப்படடும் நாளாந்த நிலவர அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய (ஓகஸ்ட்-17) தினம் 120 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 5 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் நேற்றைய தினம் 1185 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 937 பேர் பூரணமாக குணமடைந்து திரும்யுள்ள நிலையில் தற்போது 54 ஆயிரத்து 122 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE