வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்களான நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவு அமைக்கப்படவுள்ளன.
இதன் முதல் கட்டமாக கிழக்கு புறம் செம்மணி வீதியில் வீதி வளைவு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தெற்கு புறமான வீதி வளைவு கோயில் வீதியில் கைலாச பிள்ளையார் கோவிலடியில் அமையவுள்ளது.
இந்த வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் ஆகம வழிபாடு இன்று (19) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
நல்லூர் சிவாச்சாரியார், ஆன்மீக பெரியோர்கள், ஆலய தொண்டர்கள் என பலர் இந்த வழிபாட்டில் பங்கேற்றனர்.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், நல்லூர்