Thursday 28th of March 2024 10:40:55 AM GMT

LANGUAGE - TAMIL
-
மன்னாரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது!

மன்னாரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் கைது!


இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் புதன் கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் போக்குவரத்து சாலையின் பின் பகுதியில் வைத்து இலஞ்சம் பெற்ற போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்...

இலங்கை அரச போக்கு வரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் நபர் ஒருவரிடம் முறைப்பாடு ஒன்றை சீர் செய்வதற்கு என 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE