தமிழ்நாட்டில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் அடிப்படையில் இதுவரை 6123 பேரை பலியெடுத்துள்ளது கொரோனா வைரஸ்.
தமிழ்நாடு சுகாதார அடைச்சினால் வெளியிடப்பட்டு வரும் கொரோனா தொற்று தொடர்பான நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 6 ஆயிரத்து 123 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வெளியிடப்பட்ட நாளாந்த அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி 116 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 ஆயிரத்து 795 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்ற உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 55 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்றைய தினமும் 1186 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மொத்த தொற்றாளர்களது எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 267 ஆக உயர்வடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் குணமடைந்து வெளியேறியவர்களது எண்ணிக்கை 2 இலட்சத்து 96 ஆயிரத்து 171 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் தற்போது 53 ஆயிரத்து 155 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை