அவுஸ்திரேலியாவில் தங்க வேட்டையில் ஈடுபட்ட இருவருக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் சுமார் 250,000 அமெரிக்க டொலா் பெறுமதியான 3.5 எடையுள்ள இரண்டு தங்கக் கட்டிகள் கிடைத்துள்ளன.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள தங்க சுரங்க நகரமான தர்னகுல்லா அருகே ப்ரெண்ட் ஷானன் மற்றும் ஈதன் வெஸ்ட் ஆகியோர் இந்த தங்கக்கட்டிகளை கண்டுபிடித்தனர்.
நேற்று வியாழக்கிழமை ஒளிபரப்பப்பட்ட 'ஆஸி கோல்ட் ஹண்டர்ஸ்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர்களின் இந்த கண்டுபிடிப்பு குறித்துத் தகவல் வெளியிடப்பட்டது.
இவர்கள் இருவரும் குறிப்பிட்ட சில இடங்களில் மண்ணை தோண்டி, அங்கு ஆழத்தில் தங்கம் இருக்கிறதா? என்பதை உலோகத்தை கண்டறியும் கருவியை கொண்டு ஆய்ந்தனர்.
இவை நிச்சயமாக மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஒரே நாளில் இரண்டு பெரிய தங்கக்கட்டிகளை கண்டறிந்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என தங்களது இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக ஈதன் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் யாருமே தோண்டாத இடத்தை தெரிவு செய்திருந்தோம். அங்குதான் எங்களுக்கு இந்த தங்கக்கட்டிகள் கிடைத்தன. நான் சுமார் நான்காண்டுகளாக தங்க வேட்டையில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை கிட்டத்தட்ட 'ஆயிரக்கணக்கான தங்கக்கட்டிகளைக் கண்டறிந்துள்ளேன். ஆனால் எனது வேட்டையில் அதிக எடையில் தங்கக் கட்டிகள் சிக்கியது இதுவே முதல் தடவை எனவும் ஈதன் வெஸ்ட் தெரிவித்துள்ளார்.
Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா