Wednesday 24th of April 2024 05:55:47 PM GMT

LANGUAGE - TAMIL
-
தந்தையின் உடல் நிலை குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் சரண்! (2ஆம் இணைப்பு)

தந்தையின் உடல் நிலை குறித்து வெளியான தகவலில் உண்மையில்லை என்கிறார் சரண்! (2ஆம் இணைப்பு)


பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனாத் தொற்று இல்லை என்று தான் தெரிவித்தாக வெளிவரும் தகவல்களில் உண்மையில்லை என்றும் அவர் தொடர்ந்தும் அதே நிலையிலேயே சிகிச்சை பெற்றுவருகிறார் என்றும் எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார்.

இன்று மாலையே உத்தியோகபூர்வமான தகவலை வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய இணைப்பு கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த தென்னிந்தியாவின் திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாத் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக மகன் எஸ்.பி.சரண் அறிவித்துள்ளார் என்று தமிழகத்தில் உள்ள சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த சில வாரமாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்பில் வதந்திகளும் தீவிரமாக பரவியிருந்தன.

இந்நிலையில் அவர் சுவாசக் கோளாறினால் கடுமையாகச் சிரமப்பட்டிருந்த நிலையில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பின்கீழ் அவர் பராமரிக்கப்பட்டுவந்திருந்தார்.

இந்நிலையில் தந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனாத் தொற்றுத் தொடர்பிலான பரிசோதனையின் அடிப்படையில் அவருக்கு கொரோனாத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மகன் சரண் அறிவித்துள்ளார் என்று தமிழக ஊடகங்கள் சில தகவல் வெளியிட்டுள்ளன.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE