2ம் இணைப்பு....
ஜமைக்காவைச் சேர்ந்த உலகின் அதிவேக ஒட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக்கில் பல தடவைகள் தங்கப் பதங்கம் வென்ற உசேன் போல்ட் தற்போது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவருகிறார்.
ஜமைக்காவில் கொரோனா தொற்று நோய் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான செய்தி வெளியாகியுள்ளது.
ஜமைக்காவில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 116 புதிய தொற்று நோயாளா்கள் உறுதி செய்யப்பட்டனா். இது இங்கு இதுவரை ஒரு நாளில் பதிவான அதிகூடிய தொற்று நோயாளார் தொகையாகும்.
ஜமைக்காவின் தொற்று நோயாளா்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து நாட்களில் 383-ஆல் அதிகரித்துள்ளது. இங்கு இதுவரை மொத்தமாக 1529 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜமைக்காவின் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்போது அதிகளவில் கூடிய கூட்டங்களே தொற்று அதிகரிப்புக்குக் காரணம் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.
முன்னைய செய்தி....
உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகின் அதிவேக ஓட்ட வீரர் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Category: விளையாட்டு, புதிது
Tags: கொரோனா (COVID-19), உலகம்