Thursday 18th of April 2024 03:32:52 AM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு  பலியானோர் தொகை 525 ஆக அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு பலியானோர் தொகை 525 ஆக அதிகரிப்பு!


அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸூக்குப் பலியானோர் எண்ணிக்கை 525 ஆக அதிகரித்துள்ளது. விக்டோரியா மாநிலத்தில் மட்டும் 438 போ் இறந்துள்ளனர்.

விக்டோரியாவில் இன்று காலை வரையான கடந்த 24 மணிநேரங்களில் புதிதாக 148 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ள அதேநேரம் 8 பேர் மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களில் 7 பேர் முதியோர் இல்லங்களில் ஏற்பட்ட கொரோனா பரவலுடன் தொடர்புடையவர்களாவர்.

தற்போது விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 35 பேர் உட்பட 617 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய தொற்று நோயாளா்களுடன் அவுஸ்திரேலியாவில் மொத்தமாகத் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,053 ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 19,603 போ் தொற்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதேவேளை மாநிலம் முழுவதும் நடைமுறையிலுள்ள சுகாதார அவசர நிலை எதிர்வரும் செப்டம்பர் 13-ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில் இதனை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பதற்கு விக்டோரியா மாகாண முதல்வர் டானியல் அண்ட்ரூஸ் திட்டமிட்டுள்ளபோதிலும் இதற்கு பாரிய எதிர்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE