ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் மற்றும் தேசியப் பட்டியல் நியமன விவகாரங்களில் எவ்வித முடிவும் காணப்படாது முடிவுக்கு வந்துள்ளது இன்றைய செயற்குழு கூட்டம்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (ஓகஸ்ட்-25) பிற்பகல் சிறிகொத்தhவில் இடம்பெற்றது.
இதன்போது, கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்த கலந்துரையாடப்பட்டுள்ள போதிலும் கட்சியின் தலைமைத்துவம் குறித்து எவ்வித தீர்மானங்களும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், எதிர்வரும் செப்டம்பர் - 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைமைத்துவம் மற்றும் தேசிய பட்டியல் உறுப்பினர் குறித்து இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை