இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை விராட் கோலி அனுஷ்கா சர்மா தம்பதியர் சமூக ஊடகம் வாயிலாக அறிவித்துள்ளனர்.
"இனி நாங்கள் மூன்று பேர்! ஜனவரி 2021 க்கு வருகிறது" என்று அனுஷ்கா தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து இன்று மு.பகல் 11.03 இற்கு டுவீட் செய்துள்ளார். அதே நேரத்தில் கோலியும் அதே வார்த்தைகளை எழுதி உறுதி செய்து உள்ளார்.
இத்தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருவதுடன் இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
விராட் கோலி அனுஷ்கா சர்மா ஜோடி கடந்த 2017 டிசம்பரில் இத்தாலியில் திருமணம் செய்து கெண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா