Friday 29th of March 2024 03:14:46 AM GMT

LANGUAGE - TAMIL
.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கோட்டாவுடன் கலந்துரையாடல்!

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கோட்டாவுடன் கலந்துரையாடல்!


இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவுக்கும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் T. எஸ்பர் (Mark Esper) ஆகியோருக்கு இடையே தொலைபேசி வழியே முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலின் போது அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எஸ்பர், கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றினை வெற்றிகரமாக கையாண்டமை மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் சமீபத்திய முடிவுக்கு ஜனாதிபதியை வாழ்த்தியுள்ளார்.

மேலும் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் குறித்த தொடர்ச்சியான முன்னேற்றத்தை வலியுறுத்தினார்.

அனைத்து நாடுகளின் இறையாண்மையை உறுதிப்படுத்தும் ஒரு சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் மீதான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பொதுவான இருதரப்பு பாதுகாப்பு முன்னுரிமைகளை மறுஆய்வு செய்த அவர்கள், இராணுவ தொழில்மயமாக்கல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தினர்.

இரு தலைவர்களும் இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும், பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை, அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE