Tuesday 16th of April 2024 07:58:43 AM GMT

LANGUAGE - TAMIL
.
உடற்பயிற்சி செய்யும் எஸ்.பி.பி.; உடல் நிலையில் முன்னேற்றம்!

உடற்பயிற்சி செய்யும் எஸ்.பி.பி.; உடல் நிலையில் முன்னேற்றம்!


கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ஆபத்தான கட்டம் வரை சென்ற பிரபல பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளதாகவும் சிகிச்சைக்கும் அவா் நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவா் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.ஜி.எம். மருத்துவமனை நிா்வாகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் தொடர்ந்தும் அவா் வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவருகிறார். அவரை மருத்துவா்கள் தொடர்ந்தும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சுவாசமும் சற்று சீராகியுள்ளது. அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது. உங்கள் பிரார்த்தனைகளுடன் அப்பா நோயிலிருந்து விரைவில் மீண்டு வருவார் என எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் இன்று தனது இன்ஸ்ராகிம் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

அப்பாவின் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் என்னிடம் பகிர்ந்து வருகின்றனர். அப்பாவின் நுரையீரல் எக்ஸ்ரேவை என்னிடம் காட்டினார்கள். நல்ல முன்னேற்றம் தெரிகிறது. அப்பா பிஸியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். நீண்ட நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால் தசைகள் வலுப் பெற நிறைய உடற்பயிற்சி செய்து வருகிறார். அவரது சுவாசமும் சற்று சீராகியுள்ளது. எனவே அவரது நிலையில் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்க முடிகிறது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று அம்மாவும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். அவா் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். நன்றாகத் தேறி வருகிறார். வீட்டுக்குத் திரும்பிவிட்டார் எனவும் சரண் கூறியுள்ளார்.

மீண்டும் உங்கள் அனைவரின் அன்பு, அக்கறை, பிரார்த்தனைகளுக்கு நன்றி. உங்களுக்கு நாங்கள் கடன் பட்டிருக்கிறோம் எனவும் எஸ்.பி.பி . இன்று மாலை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE