கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பி.பகல் உயிரிழந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணப் முகர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வைகயில் இந்தியா முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுட்டிக்கப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று ஒருபுறம் தாக்கிய நிலையில் மூளையில் ஏற்பட்ட இரத்தக் கட்டியை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையை அடுத்து கோமா நிலைக்கு சென்றிருந்தார் பிரணாப் முகர்ஜி.
டெல்லி இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பி.பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு உயிரிழந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்தியா முழுவதும் 7 நாட்கள் துக்கம் அனுட்டிக்கபட உள்ளதாக இந்திய மத்திய அரசு சற்று முன்னதாக அறிவித்துள்ளது.இந்நிலையில் பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா