Thursday 25th of April 2024 04:01:43 AM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவுக்குச் சவால் விடுக்கும் எவரும்  அதிக விலை கொடுக்க நேருமென எச்சரிக்கை!

சீனாவுக்குச் சவால் விடுக்கும் எவரும் அதிக விலை கொடுக்க நேருமென எச்சரிக்கை!


சீனாவின் கொள்கைகளுக்கு எதிராகச் சவால் விடுக்கும் எவரும் அதற்காக அதிக விலை கொடுக்க நேரிடும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி எச்சரித்துள்ளார்.

ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ் பயணமாகச் சென்றுள்ள வாங் யி, அங்குவைத்து கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

குறிப்பாக செக் குடியரசின் செனட் சபை பேச்சாளர் தாய்வானுக்குப் பயணம் செய்துள்ளமையை விசனத்துடன் அவர் சுட்டிக்காட்டினார்.

தாய்வான் சீனப் பிராந்தியத்தின் ஒரு தவிர்க்கமுடியாத பகுதியாகும் என வாங் கூறினார். தாய்வான் தொடா்பாக சீனாவின் கொள்கைகளுக்குச் சவால் விடுப்பதானது 1.4 பில்லியன் சீன மக்களை எதிரியாக ஆக்குவதுடன், சர்வதேச நம்பிக்கை மற்றும் நடத்தை மீறலாக அமையும் என்றும் வாங் யி குறிப்பிட்டார்.

செக் குடியரசின் செக் குடியரசின் செனட் சபாநாயகர் மிலோஸ் விஸ்ட்ரசில் தாய்னுக்கு விஜயம் செய்ததை ஆத்திரமூட்டும் நடவடிக்கை என விமர்சித்த வாங், அந்த அரசியல்வாதியின் பின்னால் உள்ள சீன எதிர்ப்பு சக்திகள் சீனாவுக்குவ் சவால் விடுக்க முற்பட்டால் சீன அரசும் சீன மக்களும் அதனைத் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

செக் குடியரசின் செனட் சபாநாயகர் மிலோஸ் விஸ்ட்ரசில் ஞாயிற்றுக்கிழமை தாய்வான் தீவுக்கு தனது பயணத்தைத் தொடங்கினார். 6 நாட்களைக் கொண்ட அவரது இந்தப் பயணத்துக்கு சீன அரசு மட்டுமன்றி செக் குடியரசு ஜனாதிபதி அலுவலகமும் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: சீனா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE