Thursday 18th of April 2024 10:34:15 PM GMT

LANGUAGE - TAMIL
.
19ம் திருத்தத்தில் கைவைக்காதீர்; புதிய அரசமைப்பே வேண்டும்! - சம்பந்தன் வலியுறுத்து!

19ம் திருத்தத்தில் கைவைக்காதீர்; புதிய அரசமைப்பே வேண்டும்! - சம்பந்தன் வலியுறுத்து!


"அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசு கைவைக்க வேண்டிய அவசியமில்லை."

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"19ஆவது திருத்தத்தால்தான் கடந்த ஆட்சியில் நாடு ஜனநாயக வழியில் பயணித்தது. இடையில் நடந்த சதிப்புரட்சியால் 52 நாட்கள் தளம்பல் ஏற்பட்டது. எனினும், உயர்நீதிமன்றம் அந்தத் தளம்பல் நிலைக்கு முடிவு கட்டியது.

புதிய அரசும் ஜனநாயக வழியில் பயணிக்க வேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். 19ஆவது திருத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நாம் விரும்பவில்லை.

அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் வழிவகுக்கும் புதிய அரசமைப்பையே நாம் விரும்புகின்றோம். அதை இந்த அரசு உடன் கொண்டுவர வேண்டும்" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இரா சம்பந்தன், இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE