ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் பயணமாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று புதன்கிழமை ரஷ்யா புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தக் கூட்டத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி சோய்குவை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல்வேறு பாதுகாப்பு கொள்முதல் திட்டங்களை செயற்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் வீ ஃபெங் கலந்துகொள்ளவுள்ளார். எனினும் இந்திய - சீன பாதுகாப்பு அமைச்சர்கள் தனியே சந்தித்துப் பேசும் திட்டங்கள் எதுவும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தச் சந்திப்பை முடித்துக்கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் செப்டம்பர் 5-ஆம் திகதி மாலை மொஸ்கோவிலிருந்து டெல்லி திரும்பவுள்ளார்.