Friday 29th of March 2024 08:31:37 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்து 110 பேர் பலி!

தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு 6 ஆயிரத்து 110 பேர் பலி!


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் இதுவரை 6 ஆயிரத்து 110 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழ்நாடு சுகாதார அமைச்சு வெளியிட்டு வரும் நாளாந்த தொற்று தொடர்பான அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பி.பகல் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்றைய நாளில் 5 ஆயிரத்து 892 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களத எண்ணிக்கை 4 இலட்சத்து 45 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.

கொரோன தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் 92 பேர் உயிரிழந்தள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 6 ஆயிரத்து 110 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய தினம் சென்னையில் 968 பேரும், கோயம்புத்தூரில் 593 பேரும், கூடலூரில் 590 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சையின் பின்னர் இதுவரை 3 இலட்சத்து 86 ஆயிரத்து 173 பேர் குணமடைந்து வெளியேறிய நிலையில் தற்போது 52 ஆயிரத்து 70 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE