இந்தியாவை மிரட்டிவரும் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இலக்கான நிலையில் உலகளாவிய நாளாந்த தொற்று அடிப்படையில் அதிகூடிய தொற்று பதிவாகும் நாடாக இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
இன்று (செப்-6) காலை 8.00 மணி வரையான கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரத்து 632 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் சற்று முன்னதாக தெரிவித்துள்ளது.
இதுவரையான நாளாந்த தொற்று அடிப்படையில் அதிகூடிய தொற்று பதிவாகிய நாளாக கடந்த 24 மணி நேரம் அமைந்துள்ளது.
கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 70 ஆயிரத்து 626 ஆக உயர்வடைந்துள்ளது.
அதுமாத்திரமல்லாது உலகளாவிய நாளாந்த தொற்று அதிகம் இனம்காணப்படும் நாடாகாவும் இந்தியா தொடர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 42 ஆயிரத்து 95 புதிய தொற்றுகளும், பிரேசிலில் 31 ஆயிரத்து 199 புதிய தொற்றுகளுமே கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 41 இலட்சத்து 13 ஆயிரத்து 811 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 இலட்சம் கொரோனா தொற்றாளர்கள் இந்தியா முழுவதும் இனம் காணப்பட்டுள்ளனர். இது புதிய உச்சமாக கணிக்கப்பட்டுள்ளது.
140 கோடி மக்கள் தொகையுடன் உலகின் 2வது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக திகழ்ந்துவரும் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகின்றமை அனைவரையும் கவலையுடன் நோக்க வைத்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக மகராஷ்ட்ராவில் 8 இலட்சத்து 83 ஆயிரத்து 862 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் 26 ஆயிரத்து 276 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரபிரதேசததில் 4 இலட்சத்து 87 ஆயிரத்து 331 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் 4 அயிரத்து 347 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 4 இலட்சத்து 57 ஆயிரத்து 697 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் 7 அயிரத்து 748 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கர்னாடகாவில் 3 இலட்சத்து 89 ஆயிரத்து 232 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் 6 அயிரத்து 298 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 2 இலட்சத்து 59 ஆயிரத்து 765 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் 3 அயிரத்து 843 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லியில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 193 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் 4 அயிரத்து 538 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இதுவரை 31 இலட்சத்து 80 ஆயிரத்து 865 பேர் குணமடைந்து வெளியேறியுள்ள நிலையில் தற்போது 8 இலட்சத்து 62 ஆயிரத்து 320 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு, புது தில்லி