Thursday 25th of April 2024 08:51:05 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!

கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்!


கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் இன்று வெளியிட்டுள்ள காணொளிப்பதிவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை. தொடர்ந்து மருத்துவர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ஐ.பி.எல். கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். தான் பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார். நுரையீரல் தொற்று குணமடைந்து வருகிறது, பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உங்களுடைய ஆசிர்வாதத்தால் விரைவில் குணமடைந்து விடுவார் என்று தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE